Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, May 23, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்:



அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்..
(எடுத்தெரியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால் (துவங்குகிறேன்)
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)



இறைவனிடம் கையேந்துங்கள்:

ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ர­லி)
நூற்கள்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்


இறைவனிடம் கையேந்தி கேட்க்கப்படும் எந்தப் ஒரு பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை என்பதினை இந்த நபிமொழி கூறுகிறது.



"தேவைகள்" என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கிய அம்சமாகும். தேவைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது

நமது தேவைகளை, இறைவனிடம் மட்டுமே தான் கூற முடியும். இறைவனிடம் அந்த ஹலாலான தேவைகளை சொல்லும் போது நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி கூட சில தேவைகள் நிறைவேறாவிட்டால் கூட இறைவனிடத்தில் தேவைகளை ஒப்படைத்து விட்டோம். அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.



நாம் தினம் தினம் இறைவனை நினைத்து தொழுது இறைவனை வணங்கி அவனிடமே இருகரம் ஏந்தி பிராத்திக்க வேண்டும்..
சிலர் தினமும் 5 வேலை கடமைக்காக தொழுது... இறைவனிடம் தேவைகளை மட்டுமே குறி வைத்து கேட்டு தொழுதால் அந்த தேடல்கள் நிறைவேறுவது கஷ்டமே..

கஷ்டம் வரும் பொழுது மட்டுமே சிலர் இறைவனை நாடுகிறார்கள்.. அழுது தொழுது அந்த வேலையில் மட்டுமே இறை ஞானம் வரும் சிலரையும் பார்க்க முடிகிறது.. இது அவர்கள் அறியாமல் செய்யும் தவறு..(அல்லாஹ் காப்பாற்றுவானாக) அல்லாஹ் நன்கு அறிந்தவன்..

அப்படி எல்லாம் தேவைகளுக்கு மட்டுமே இறைவனை நாடாமல் இறை நேசத்துடனும் அவனுக்கு நன்றி செலுத்தியும் இறைவனிடம் மன்றாடி கேளுங்கள்... உங்களின் தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்...

அவனிடம் மட்டுமே கோரிக்கை வையுங்கள்... மனதினை ஓர்நிலைப் படுத்தி இறையச்சத்துடன் பயபக்தியுடனும் தொழுது நமது தேவைகளை கேட்டால் நிச்சயம் அந்த தேவைகள் நிறைவேறும்.. (அல்லாஹ் துணையிருப்பான்)

எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாகவும் ஆமீன்..


இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் வேறு சில இறை செய்திகளுடன் சந்திக்கிறேன் வஸலாம்
..............................................................................
இந்த பக்கத்தினை நான் உருவாக்க காரணங்கள் உண்டு...
மார்க்க அறிவினை நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதர்க்கும்
எனது மகளுக்கு மார்க்க விஷயங்களை சொல்லி கொடுக்க இது ஒரு பாலமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், எனது நேரத்தினையும் படிக்கும் உங்களின் நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பம் செய்திருக்கேன்.. உங்களின் தூவாக்களுடன்...
இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வாரம் ஓர் பதிவு போடலாம் என்று இருக்கேன் (இன்ஷா அல்லாஹ்)


Sunday, May 22, 2011

அர்ஷின் கீழ் நிழல் தரும் அந்த 7 கூட்டத்தினர்:

அல்லாஹ்வின் நிழலைத் தவர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் 7 கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் இடம் கொடுப்பான்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஹ்ஷர் வெளியின் அகோரம்:
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும், அங்கு சூரியன் மனிதர்களுக்கு ஒரு மைல் தூரத்தில் நெருங்கியிருக்கும்.
மனிதர்கள் அவரவர் செய்த பாவத்திற்கிணங்க வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.


அந்த இடத்தில் 4 கேள்விக்கு விடை சொல்லாதவரை ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. அந்த கேள்வி 1. உலகில் தன் வாழ்நாளை எப்படி கழித்தார்?
2.தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார்?
3.தன் பணத்தை எங்கிருந்து சம்பாதித்தார்? இன்னும் எப்படி செலவு செய்தார்?
4.தன் உடம்பில் எதனை அர்பணித்தார் என்று 4 கேள்விகள் கேட்க்கப்படும் வரை அடியானின் இரு பாதங்களும் அவர் இருக்கும் இடம் விட்டு நகராது என்று நபி(ஸ்ல) அவர்கள் கூரினார்கள்
இப்படி இக்கட்டான சூழ்நிலையில், ஓவ்வொருவரும் தன்னை பற்றியே சிந்திக்கும் அந் நாளில் தான் அல்லாஹ் தனது அர்ஷியின் நிழலில் 7 கூட்டத்தினரை அமரவைப்பான்.

அவர்கள்
1. நீதியான அரசன்.
2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் உருவான வாலிபன்.
3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்
4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்
5. நல்ல குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபசாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று கூறி ஓதுங்கிக் கொண்டவர்
6. வலது கரம் கொடுக்கும் தர்மம் இடது கரம் தெரியாமல் மறைமுகமாக தர்மம் செய்பவர்கள்
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவர்.
அன்பு நண்பர்களே மேலே சொன்ன 7 கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று இந்த நோன்பு வேலையில் முடிவு எடுங்கள்.
அல்லாஹ் நிச்சயம் துணை இருப்பான் ஆமீன்


இஸ்லாமிய கேள்வி பதில்கள்: பகுதி 2


இன்றைய இஸ்லாமிய கேள்வி பதில்கள்:

1. முதலில் இறங்கிய சூரா எது?
சூரா இக்ரஃ

2.இறுதியாக இறங்கிய சூரா எது?
சூரா இதாஜாஅ

3.குரானில் மொத்தம் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள்

4.குர் ஆனின் இதயம் எது?
யாசின் சூரா

5 மக்கி என்றால் என்ன?
மக்காவில் இறங்கிய சூராவிற்கு மக்கி என்று பெயர்.

6 மதனி என்றால் என்ன?
மதீனாவில் இறங்கிய சூராவிற்கு மதனி என்று பெயர்.

7. நாம் எத்தனை விஷ்யங்களைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்? அவையாவை?
6 விஷ்யங்கள் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்.
அவை
1. ஆமத்துபில்லாஹி
2. வமாலாயிக்கத்திஹி
3. வகுத்பிஹி
4 வரசூலிஹி
5. வல்யவ்மில் ஆஹிரி
6. வல்கத்ரி ஹைரிஹி வஷ்ர்ரிஹி மிளல்லாஹி த ஆலா
இதன் பொருள் "நான் அல்லாஹூ த ஆலாவைக் கொண்டும், அவனுடைய மலக்குகள் உண்டென்றும், அவனது வேதங்கள் உண்மை என்றும், அவனது ரஸூல்மார்கள் மெய்யானவர்கள் என்றும், இறுதி(கியாமத்து) நாள் உண்டு என்றும், விதியின் படி நன்மையும் தீமையும் அல்லாஹூ த ஆலாவினால் உண்டாகின்றன என்றும், மரணத்திற்குப் பின் உயிர்ப் பெற்று எழுப்புவது உண்டு என்றும் ஈமான் கொள்கிறேன்" என்பதாகும்

8. ஒருவரை ஒருவர் சந்தித்தால் என்ன சொல்ல வேண்டும்?
அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும்.

9.ரஃசுல் குரான் என்பதின் பொருள் என்ன?
இது எதை குறிக்கும்?
ரஃசுல் குரான் என்பது குரானின் தலையாகும் இது சூரா பாத்திஹாவை குறிக்கும்.

10 கியாமம்(இறுதி நாள்) முடியும் நாள் எது?
வெள்ளிக் கிழமை


இஸ்லாமிய கேள்வி பதில்கள்


1.நமது இறைவன் யார்?

நமது இறைவன் அல்லாஹ்

2.நமது நபி யார்?

முஹம்மது நபி ஸல்லலாஹீ அலைக்ஹி வஸ்ஸலாம் அவார்கள்

3.நமது நபி அவர்கள் எங்கு பிறந்தார்கள்?

மக்காவில்

4.நமது நபி அவர்கள் எங்கு வஃபாத்தானார்கள்?

மதினாவில்

5.நமது நபியின் தாய், தந்தை பெயர் என்ன?

ஆமீனா உம்மா, அப்துல்லாஹ்

6.நமது முதல் நபி யார்?

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

7.நமது வேதம் எது?

திருக்குரான்

8.நாம் எதை நோக்கி தொழுகின்றோம்?

கஃபாவை நோக்கி தொழுகிறோம்.

9.நீ யார்?

நான் ஒரு முஃமீன்

10.இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் 5 அவை 1.கலிமா2.தொழுகை3.ஜகாத்து,4.நோன்பு5.ஹஜ்

11.சுவர்கத்தின் திறவு கோல் எது?

தொழுகை

12.ஒரு நாளைக்கு எத்தனை வேளை தொழுகிறோம்?

5

13.நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

சுவர்கம்

14.தீமை செய்தால் என்ன கிடைக்கும்?

நரகம்
15.நமது இறுதி நபி யார்?

முகம்மது நபி ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்


Saturday, May 21, 2011

தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்






அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த நன்நாள் பற்றி நண்பர்களின் வலைப்பூவில் பார்க்கவும்.. அஸ்மா, அந்நியன்
யாசர் அராபாத்
, காயலாங்கடை காதர்