Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, January 20, 2012

அமானிதம் பேணல்


இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். - 2:283
.



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று குழந்தைக்கான மார்க்க கதையில் அமானிதம் பேணல் பற்றி சொல்லப் போகிறேன்.
  • உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்ற புகழ் பெற்ற கலீஃபா ஒருவர் இருந்தார். அவர் அரசாங்கக் கருவூலத்தைப் பொதுமக்களின் அமானிதமாகக் கருதினார். அதனை பேணிப் பாதுகாத்து வந்தார்.
  • ஒரு நாள் அரசாங்கக் கருவூலத்துக்கு ஆப்பிள் பழங்கள் வந்தன. அவர் அவற்றைச் சட்டப்படி மக்களுக்குப் பங்கிட்டுத் தந்து கொண்டிருந்தார்.
  • அப்பக்கமாக அவரின் சிறிய பிள்ளைகள் வந்தன. ஏதுவும் அறியா சிறு பிள்ளைகள்ளாக இருந்தார்கள். இந்த ஆப்பிள் பழம் யாருடையதென அவர்களுக்கு எப்படி தெரியும்.?
  • தம் வாப்பா தானே அனைவருக்கும் கொடுத்துக்கொண்டுயிருரார்கள் நம்முடையது தான் என்று நினைத்து ஒரு ஆப்பிளை எடுத்து தின்ன முயன்றது.
  • ஆப்பிள் பழம் அரசங்கத்துடையது. அரசாங்க பொருட்களோ குடிமக்களுக்குரியது! என்று தம் பிள்ளைகள் ஆப்பிள் பழம் எடுத்து உண்ண எப்படி அனுமதிப்பார்? அப்படியே அனுமதித்தால் மக்கள் பொருள் பொருள் மீது நம்பிக்கை மோசதி செய்வதாகிவிடுமே!
  • இதனால் கலீஃபா தம் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கிக் கொண்டார். பிள்ளைகள் அழ ஆரம்பித்துவிட்டது. கலீஃபாவும் தன் அருகில் அழைத்தார், ஆயினும் பிள்ளைகள் அழுதுக்கொண்டே தன் வீட்டிர்க்குச் சென்று நடந்ததனை தாயிடம் சொன்னது.



தாய் , மகனின் கண்ணீரை துடைத்துவிட்டு, அருகில் இருக்கும் கடையில் ஆப்பிள் வாங்கி கொடுத்து சமாதானம் செய்தார்கள்.
கலீஃபா வீட்டினுள் நுழைந்த பொழுது ஆப்பிள் வாடை வீசியது, " அரசாங்க ஆப்பிள் எதுவும் வீட்டினுள் வரவில்லையே?" என்று தன் மனைவியிடம் கேட்டார்.
"அரசாங்க ஆப்பிள் ஒன்றுமில்லை, நான் கடையில் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்..
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.8:27.

பிள்ளைகளிடம் நீங்கள் ஆப்பிள் வாங்கியதால் குழந்தைகள் அழுதுக்கொண்டே வந்தன. எவ்வளவும் சொல்லியும் அவர்கள் திருப்தியடையவில்லை. ஆகையால் நான் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்.

பீவி! நான் என்ன செய்வேன்! ஆப்பிள் அரசாங்கத்துக்குரியது. ஒரு ஆப்பிள் நான் எடுத்தாலும் அல்லாஹ்வினிடத்தில் ஈமான் அற்றவனாய்யாகிவிடுவேனே.. என்று தான் நான் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கினேன் என்றார்கள்.
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும்,
மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58


பிள்ளைகளை இந்த கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது.. நம்மிடத்தில் ஒருவர் பாதுகாப்பாக கொடுத்த எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்தக் கூடாது.. அப்படி நாம் அவர்களின் பொருட்களை நாம் எடுத்தால் நிச்சயமாக மறுமையில் அல்லாஹ்விடம் ஈமான் அற்ரவர்களாகிவிடுவோம்.. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.



Friday, January 6, 2012

அண்டை வீட்டாரிடம் அன்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்னைக்கு நமது வலைப்பூவில் குழந்தைகளுக்கான மார்க்க கதை சொல்லபோறேன்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அப்துல்லாஹ் (ரலி) என்ற ஒரு ஸஹாபி இருந்தார். அவர் மிகவும் நல்லவராகவும், அல்லாஹ், ரஸூலின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்.
அவருக்கு அண்டை வீட்டில் ஒரு யூதர் இருந்தார்.
ஒரு நாள் அப்துல்லாஹ் (ரலி) வெளியே போயிருந்தார். மாலையில் தான் வீட்டுக்குத் திரும்பினார். அவர் வீட்டில் உணவாக ஒரு கடா அறுக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து
"அண்டை வீட்டுக்காரருக்கு மாமிசம் கொடுத்தீர்களா?" எனக் கேட்டார்கள்.
"அவரோ யூதர், அவருக்கு ஏன் கொடுக்க வேண்டும்?"
என்று வீட்டார்கள் கேட்டார்கள்.
"யூதராக இருந்தால் என்ன? அவர் நமது அண்டை வீட்டார்தானே. என அப்துல்லாஹ் (ரலி) பதில் கூறினார்கள்.
"அண்டை வீட்டாருடன் அன்புடன் நடந்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் நம் இஸ்லாமியராக இருந்தாலும் சரி இஸ்லாமியர் அல்லாதவர்களாக இருந்தாலும் சரியே" என்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) வற்புறுத்திக் கூறியுள்ளதை அப்துல்லாக்(ரலி) தம் வீட்டாருக்கு எடுத்துணர்த்தினார்கள்..
அன்பு குழந்தைகளே.. இந்த கதையின் மூலம் உங்களுக்கு என்ன புரிந்தது..? நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நாம் எந்தளவுக்கு அன்பாய் இருக்கிறோமோ இதனை போல் நாம் அண்டை வீட்டாரிடமும் அன்பாய்யிருக்க வேண்டும். குர்ஆனிலும் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையிலும் அண்டை வீட்டாருடன் இனக்கமாக நடந்து கொள்வது வலியுறுத்தப்படுகிறது. அண்டைவீட்டாரிடம் அன்பாய் இருக்கனும் அவர்களுக்கு நம்மால் எந்த துன்பமும் கொடுக்ககூடாது..
நபி நாயகம் (ஸல்) "எவர் அண்டை வீட்டாரை துன்புறுத்துகின்றாரோ அவர் என்னை துன்புறுத்தியவராவார்.
அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன்."
“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து, அவரது அடுத்த வீட்டுக்காரன் பயமற்று இருக்கவில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார்” என
-அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம்)
அண்டை வீட்டாருக்கு நம்முடைய அன்பும், அரவணைப்பும், விருந்தும் இரு குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
வஸலாம்