Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, May 22, 2011

இஸ்லாமிய கேள்வி பதில்கள்: பகுதி 2


இன்றைய இஸ்லாமிய கேள்வி பதில்கள்:

1. முதலில் இறங்கிய சூரா எது?
சூரா இக்ரஃ

2.இறுதியாக இறங்கிய சூரா எது?
சூரா இதாஜாஅ

3.குரானில் மொத்தம் எத்தனை சூராக்கள் உள்ளன?
114 சூராக்கள்

4.குர் ஆனின் இதயம் எது?
யாசின் சூரா

5 மக்கி என்றால் என்ன?
மக்காவில் இறங்கிய சூராவிற்கு மக்கி என்று பெயர்.

6 மதனி என்றால் என்ன?
மதீனாவில் இறங்கிய சூராவிற்கு மதனி என்று பெயர்.

7. நாம் எத்தனை விஷ்யங்களைக் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்? அவையாவை?
6 விஷ்யங்கள் கொண்டு ஈமான் கொண்டுள்ளோம்.
அவை
1. ஆமத்துபில்லாஹி
2. வமாலாயிக்கத்திஹி
3. வகுத்பிஹி
4 வரசூலிஹி
5. வல்யவ்மில் ஆஹிரி
6. வல்கத்ரி ஹைரிஹி வஷ்ர்ரிஹி மிளல்லாஹி த ஆலா
இதன் பொருள் "நான் அல்லாஹூ த ஆலாவைக் கொண்டும், அவனுடைய மலக்குகள் உண்டென்றும், அவனது வேதங்கள் உண்மை என்றும், அவனது ரஸூல்மார்கள் மெய்யானவர்கள் என்றும், இறுதி(கியாமத்து) நாள் உண்டு என்றும், விதியின் படி நன்மையும் தீமையும் அல்லாஹூ த ஆலாவினால் உண்டாகின்றன என்றும், மரணத்திற்குப் பின் உயிர்ப் பெற்று எழுப்புவது உண்டு என்றும் ஈமான் கொள்கிறேன்" என்பதாகும்

8. ஒருவரை ஒருவர் சந்தித்தால் என்ன சொல்ல வேண்டும்?
அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும்.

9.ரஃசுல் குரான் என்பதின் பொருள் என்ன?
இது எதை குறிக்கும்?
ரஃசுல் குரான் என்பது குரானின் தலையாகும் இது சூரா பாத்திஹாவை குறிக்கும்.

10 கியாமம்(இறுதி நாள்) முடியும் நாள் எது?
வெள்ளிக் கிழமை


No comments:

Post a Comment