Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, December 16, 2011

தொழுகையின் சிறப்புகள்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.



பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்)
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர்
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை


பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:

என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபி (ஸள்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:திர்மிதி



தொழுகையின் சிறப்பு
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)நூல் : அஹ்மத்
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72
தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி)
நூல்கள்: திர்மிதி,அபுதாவுத்,அஹமத்,இப்னுமாஜா

அல்லாஹ் நம் அனைவரையும் பேணிக்கொள்வானாகவும் ஆமீன். அல்லாஹ்வின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும். ஆமீன்



Friday, December 9, 2011

இறையுணர்வு


         அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.


அஸ்ஸலாமு அலைக்கும்,


இறையுணர்வு இஸ்லாமிய மக்களின் மிக உச்சக்கட்ட பண்பு இறைநம்பிக்கை என்று குர் ஆன் கூறுகிறது.


                         

* உங்களில் யார் மிகவும் இறையச்சமுடையவராக இருக்கின்றாரோ அவரே அல்லாஹ்விடத்தில் மிக கண்ணியமானவர . (49:13)


* இரக்க சிந்தை, அடக்கம், ஆசைகளையும் , உணர்வுகளையும் கட்டுப்படுத்துதல், வாய்மை, ஓழுக்கம், பொறுமை, நிலைகுலையாமை, நேர்மை, ஓப்பந்தத்தை நிறைவேற்றல் ஆகிய நற்குணங்களை பற்றி இறைஒ வேதமான திருக் குர் ஆர் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வலியுறுத்துகிறது.



 " நிலைகுலையாத பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான். (3:146)




                          


* அவர்கள் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் சொலவழிப்பார்கள் , சினத்தை அடக்கிக் கொள்வார்கள், மேலும் மக்களை மன்னிப்பார்கள், இத்தகைய உயர்பண்பினரை இறைவன் நேசிக்கிறான். ( 3:133-134)


*தொழுகையினை நிலைநிறுத்துங்கள், நல்லவற்றை ஏவுங்கள், தீமைகளை விலக்குங்கள், சிரமங்களை சாதித்துக்கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும். மனிதர்களை விட்டு முகத்தை (பெருமை கொண்டு) திருப்பிக் கொள்ளாதிர்கள். பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள், கர்வம், பெருமை கொள்வோரை இறைவன் நேசிபதில்லை. நடத்தையில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்த்திக் கொள்ளுங்கள் . (31:18-19)




Thursday, December 1, 2011

குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!


குர் ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அறிவிப்பவர் உஸ்மான்(ரலி)நூல்:புஹாரி



விளக்கம்:


  • மனித குலத்தின் ஒளி விளக்காக வந்தது திருக்குர் ஆன் ஆகும். இதில் மனிதன் ஒழுக்கமாக, நேர்மையாக, பரிசுத்தமாக , மறுமையில் வெற்றிபெற அனைத்து வழிகாட்டுதலும் உண்டு. எனவே இத்தனை சிறப்பிமிக்க இந்த குர் ஆனை தாம் கற்பது கடைமையாகும். அத்துடன் தாம் கற்றதை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதும் கடமையாகும்..



குர் ஆனைக் கற்போம்..! கற்பிப்போம்..!