Powered by Blogger.
RSS
அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, January 20, 2012

அமானிதம் பேணல்


இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். - 2:283
.



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்று குழந்தைக்கான மார்க்க கதையில் அமானிதம் பேணல் பற்றி சொல்லப் போகிறேன்.
  • உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்ற புகழ் பெற்ற கலீஃபா ஒருவர் இருந்தார். அவர் அரசாங்கக் கருவூலத்தைப் பொதுமக்களின் அமானிதமாகக் கருதினார். அதனை பேணிப் பாதுகாத்து வந்தார்.
  • ஒரு நாள் அரசாங்கக் கருவூலத்துக்கு ஆப்பிள் பழங்கள் வந்தன. அவர் அவற்றைச் சட்டப்படி மக்களுக்குப் பங்கிட்டுத் தந்து கொண்டிருந்தார்.
  • அப்பக்கமாக அவரின் சிறிய பிள்ளைகள் வந்தன. ஏதுவும் அறியா சிறு பிள்ளைகள்ளாக இருந்தார்கள். இந்த ஆப்பிள் பழம் யாருடையதென அவர்களுக்கு எப்படி தெரியும்.?
  • தம் வாப்பா தானே அனைவருக்கும் கொடுத்துக்கொண்டுயிருரார்கள் நம்முடையது தான் என்று நினைத்து ஒரு ஆப்பிளை எடுத்து தின்ன முயன்றது.
  • ஆப்பிள் பழம் அரசங்கத்துடையது. அரசாங்க பொருட்களோ குடிமக்களுக்குரியது! என்று தம் பிள்ளைகள் ஆப்பிள் பழம் எடுத்து உண்ண எப்படி அனுமதிப்பார்? அப்படியே அனுமதித்தால் மக்கள் பொருள் பொருள் மீது நம்பிக்கை மோசதி செய்வதாகிவிடுமே!
  • இதனால் கலீஃபா தம் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கிக் கொண்டார். பிள்ளைகள் அழ ஆரம்பித்துவிட்டது. கலீஃபாவும் தன் அருகில் அழைத்தார், ஆயினும் பிள்ளைகள் அழுதுக்கொண்டே தன் வீட்டிர்க்குச் சென்று நடந்ததனை தாயிடம் சொன்னது.



தாய் , மகனின் கண்ணீரை துடைத்துவிட்டு, அருகில் இருக்கும் கடையில் ஆப்பிள் வாங்கி கொடுத்து சமாதானம் செய்தார்கள்.
கலீஃபா வீட்டினுள் நுழைந்த பொழுது ஆப்பிள் வாடை வீசியது, " அரசாங்க ஆப்பிள் எதுவும் வீட்டினுள் வரவில்லையே?" என்று தன் மனைவியிடம் கேட்டார்.
"அரசாங்க ஆப்பிள் ஒன்றுமில்லை, நான் கடையில் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்..
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.8:27.

பிள்ளைகளிடம் நீங்கள் ஆப்பிள் வாங்கியதால் குழந்தைகள் அழுதுக்கொண்டே வந்தன. எவ்வளவும் சொல்லியும் அவர்கள் திருப்தியடையவில்லை. ஆகையால் நான் வாங்கி கொடுத்தேன் என்று சொன்னார்கள்.

பீவி! நான் என்ன செய்வேன்! ஆப்பிள் அரசாங்கத்துக்குரியது. ஒரு ஆப்பிள் நான் எடுத்தாலும் அல்லாஹ்வினிடத்தில் ஈமான் அற்றவனாய்யாகிவிடுவேனே.. என்று தான் நான் பிள்ளைகளிடமிருந்து ஆப்பிளை வாங்கினேன் என்றார்கள்.
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும்,
மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58


பிள்ளைகளை இந்த கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது.. நம்மிடத்தில் ஒருவர் பாதுகாப்பாக கொடுத்த எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்தக் கூடாது.. அப்படி நாம் அவர்களின் பொருட்களை நாம் எடுத்தால் நிச்சயமாக மறுமையில் அல்லாஹ்விடம் ஈமான் அற்ரவர்களாகிவிடுவோம்.. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.



6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    மிக அருமையான பகிர்வு/ கண்டிப்பா அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    ஹதீஸ் விளக்கத்துடன் அருமையாக எடுத்து போட்டு இருக்கீஙக்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அரசியல் என்றலே சாக்கடை என்ற நிலை மாறிவிட்ட இன்றைய சூழலில் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களின் தூய்மையான அரசியல் வாழ்க்கை படித்தால் இந்த கேள்வியே வர வாய்ப்பில்லை

    பகிர்வுக்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.சிநேகிதி,
    எளிமைக்கும் நேர்மைக்கும் இறையச்சத்துக்கும் உரியவரான 'இரண்டாம் உமர்' என்று மிகவும் போற்றி பாராட்டப்பட்டவரின் வரலாற்றுத்தகவலுடன், அமானிதம் பேண வேண்டும் என்ற இறைமறை கருத்துக்களை வலியுறுத்தி பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. சொடுக்கி கேளுங்க‌ள்

    >>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

    சொடுக்கி கேளுங்க‌ள்

    2. >>>>>
    பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

    இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
    அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
    . <<<<<

    .

    ReplyDelete
  5. இது போன்ற நற்கருத்துக்களைச் சொல்லும் நல்ல பதிவுகளை எழுதியுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவுகள் நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete